இன்றைய நிகழ்ச்சியில், ‘பரமேஸ்வரா’ நாட்டிய நிகழ்ச்சி குறித்த தகவல்களை நேயர்களோடு பகிர்ந்து கொள்ள போகிறார் அஸ்தானா ஆர்ட்ஸ் நிறுவனர் ரவிசங்கர்.
ஏப்ரல் 27-ம் தேதி நடைபெறவுள்ள இந்த சரித்திர நாட்டிய நிகழ்ச்சியில் மலேசிய கலைஞர்களின் படைப்புகள் மிக சிறப்பாக அமைந்துள்ளதாகவும், வித்தியசமான படைப்பாக இருக்கும் என்று சொல்கிறார் ரவிசங்கர்.
அதே வேளையில், வளரும் கலைஞர்களில் வரிசையில் தற்பொது புகழ் பெற்று வரும் மதன்குமார் சந்திப்பும் பிற்பகல் 12 மணி தொடக்கம் நேயர்கள் கேட்கலாம். ஏழு மலேசியப் பாடல்களை பாடியிருக்கும் மதன் குமார், தன்னுடைய பயணம் மற்றும் கலைத்துறையில் சாதிக்க துடிக்கும் அடுத்த லட்சியம் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார்.
அந்தப் படத்தின் சுவாரசியமான அனுபவங்கள் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறார் திரைப்படத்தின் கதாநாயகன் வினோத். 50-க்கும் மேற்ப்பட்ட மலேசிய கலைஞர்களோடு உருவாகியிருக்கும் ‘வில்லவன்’, மலேசியத் திரைப்படங்களில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பப்படுவதாகவும் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனின் அப்பாவுமாகிய டத்தோ ஸ்ரீ மோகன சுந்தரம், அத்திரைப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்த அனுபவத்தையும் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.