Home Video “அனைவருக்காகவும் நாட்டை மீண்டும் சீரமைக்கப் போகிறேன்” – மகாதீரின் கண்ணீர் காணொளி

“அனைவருக்காகவும் நாட்டை மீண்டும் சீரமைக்கப் போகிறேன்” – மகாதீரின் கண்ணீர் காணொளி

2028
0
SHARE
Ad
மகாதீர் கண்கலங்கும் காணொளி காட்சி

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இரு மலாய் குழந்தைகளுடன் பக்காத்தான் கூட்டணி தலைவர் மலாய் மொழியில் உரையாடுவது போல் அமைந்திருக்கும் குறும்படக் காணொளி (வீடியோ) ஒன்று தற்போது வெளியிடப்பட்டு, அனைவரையும் கவர்ந்து, சமூக ஊடகங்களிலும், யூடியூப் காணொளித் தளத்திலும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றது.

மலாய் உரையாடலோடு அமைந்திருந்தாலும், அந்த உரையாடல்களுக்கான ஆங்கில மொழி மாற்ற வரிகளுடன் அந்தக் காணொளி அமைந்திருக்கிறது.

ஒரு மலாய் குடும்பத்தின் உறுப்பினர்கள் தங்களுக்குள் உரையாடும்போது விலையேற்றப் பிரச்சனையை மையமாக வைத்து தங்களின் பிரச்சனைகளை விவாதிக்கின்றனர். பின்னர் அந்தக் குடும்பம் கோலாலம்பூருக்கு சுற்றுப் பயணம் வர, அங்கு அந்தக் குடும்பம் புத்ரா ஜெயாவை சுற்றிப் பார்ப்பதோடு, மகாதீரின் அலுவலகத்திற்கும் வருகை தருகின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த சமயத்தில் அங்கு வருகை தரும் மகாதீர், அந்த சிறுமியுடன் உரையாடுகிறார். அப்போது கண்கலங்க அவர் பின்வருமாறு கூறுகிறார்:

  • எனக்கு 93 வயதாகிவிட்டது. எனக்கு இன்னும் காலம் அதிகமில்லை. எனக்கிருக்கும் கொஞ்ச காலத்திற்குள் நான் நாட்டை மீண்டும் சீரமைக்க வேண்டும்.
  • கடந்த காலத்தில் நானும் சில தவறுகளைச் செய்திருக்கிறேன். அந்தத் தவறுகளை நான் திருத்தியமைக்க வேண்டும்.

பார்ப்பவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும் அந்தக் குறும்படக் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: