Home கலை உலகம் டைரக்டர் கவுதம் மேனன் மீது மேலும் ஒரு வழக்கு

டைரக்டர் கவுதம் மேனன் மீது மேலும் ஒரு வழக்கு

476
0
SHARE
Ad

gauthamசென்னை, மார்ச் 28- டைரக்டர் கவுதம்மேனன் மீது தி.நகரை சேர்ந்த ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவன இயக்குனர் ஜெயராமன் உயர் நீதிமன்றத்தில்  கடந்த வாரம் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனர் எல்டர்குமார், கவுதம் மேனன் மீது தொடர்ந்த புதிய வழக்கில்,  ‘நீ தானே என் பொன்வசந்தம்‘ படம் தயாரிக்க ரூ.10 கோடியே 65 லட்சம் கடன் வாங்கிவிட்டு தரவில்லை என கூறியிருந்தார்.

நீதிபதி சுதாகர் வழக்கை விசாரித்து, கவுதம் மேனன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.