டோமி தோமஸ் பெயர் ஒரு வாரத்திற்கு முன்பே மாமன்னரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.


சட்டப்படித்தான் அந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது என்றும் மகாதீர் விளக்கினார். “அரசியல் சாசனத்தின்படி மாமன்னர் பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். அந்த நடைமுறைக் கொள்கையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்” என்று இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் மகாதீர் தெரிவித்தார்.
டோமி தோமசின் நியமனம் பக்காத்தான் தலைவர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது. எனினும் முஸ்லீம் அல்லாத ஒருவரை அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக நியமிப்பதற்கு சுல்தான்கள் மாநாடு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் பரவியுள்ளன.
மேலும் டோமி தோமஸ் லிம் குவான் எங்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் சில தரப்புகள் கூறியிருக்கின்றன. அதற்குப் பதிலளித்த மகாதீர் “டோமி தோமஸ் பலருக்கு வழக்கறிஞராக செயல்பட்டிருக்கிறார். தங்களுக்கு வருமானம் தரக் கூடிய வழக்குகளை வழக்கறிஞர்கள் எடுப்பது வழக்கமான ஒன்றுதான்” என்றார்.