Home இந்தியா கருணாநிதி எங்கு நல்லடக்கம்? நீதிமன்றப் போராட்டம் நடைபெறுகிறது

கருணாநிதி எங்கு நல்லடக்கம்? நீதிமன்றப் போராட்டம் நடைபெறுகிறது

963
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதி எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த நீதிமன்றப் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுகவினரின் மனுவை அவசர மனுவாக ஏற்றுக் கொண்ட சென்னை நீதிமன்றம் இன்று காலை இந்திய நேரப்படி 8.30 மணிக்கு தனது விசாரணையைத் தொடக்கியுள்ளது.

மெரினாவில் இறந்தவர்களின் நினைவிடங்கள் அமைக்கப்படுவது குறித்து ஏற்கனவே சில வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளன. இன்று காலை நடைபெற்ற விசாரணையில் அந்த வழக்குகளைப் போட்ட டிராபிக் இராமசாமி, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பாலு ஆகியோர் தங்களின் வழக்குகளை மீட்டுக் கொண்டனர்.

காமராஜர் நினைவிடம் அருகில் காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் கருணாநிதியின் நல்லடக்கத்திற்காகவும், நினைவிடம் அமைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் அந்த முடிவில் தலையிட முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

#TamilSchoolmychoice

இன்று காலையே சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.