அதற்கு பதிலளிக்கும் விதமாக “காலங் காலமாக செயல்படும் இந்து அறப்பணி வாரியத்தின் செயல்பாடுகள் ஆலயங்களின் பாதுகாப்புக்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அதன் வாயிலாக இன்று ஆலயப் பிரச்சனைகளை மாநில அரசாங்கங்களின் வழி சுமூகமாக தீர்க்க வழி வகுக்க முடியும்.பினாங்கில் இது சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அறப்பணி வாரியம் அமைப்பது இந்திய சமூகத்திற்கு பெருமளவில் நன்மையைக் கொண்டுவரும்” என பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்களில் ஒருவரான கு.கிருஷ்ணசாமி செல்லியல் ஊடகத்திற்கு அனுப்பிய அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.
“ஆலயங்களில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதும், அதனால் அதன் பதிவு இரத்தாவதும் பரவலாக நடக்கிறது. பதிவிலாகாவே ஆலயங்களை அறப்பணி வாரியம் ஏற்று நடத்த பரிந்துரைக்கிறது. நிலப்பிரச்சனைகள், நில ஒதுக்கீடுகள் அனைத்தும் அறப்பணி வாரியம் மூலமாக ஆலயங்களுக்குப் பெற்றுத்தருவது என்பது சிறந்த அரசு அமைப்பாகும்.நல்ல முறையில் செயல்படும் ஆலயங்களை அறப்பணி வாரியம் ஒருபோதும் எடுக்காது. அப்படி எடுத்தாலும் பராமரிக்க பணம் வேண்டும்.எனவே பத்தாண்டுகள் பினாங்கு மாநிலத்திற்கு இதில் அனுபவம் உண்டு . எனவே டான்ஸ்ரீ குமரன் போன்றோர் கருத்து சொல்லி மக்களை குழப்பாமல் இருப்பது நல்லது” என்றும் கு.கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டார்.