மறைந்த ஐ.நா.வின் முன்னாள் தலைமைச் செயலாளர் கோபி அன்னான் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய மகாதீர், தொடர்ந்து பல்வேறு உலக சம்பவங்களை, குறிப்பாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தும் அத்துமீறல்களையும், வரம்பு மீறிய தாக்குதல்களையும் சாடினார். இதற்கு ஒரே தீர்வு பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகி செயல்பட அனுமதியளிப்பதுதான் என்றும் அவர் மேலும் கூறினார்.
புதிய ஆட்சி மாற்றத்தின் மூலம் மலேசியர்கள் வழங்கியுள்ள அதிகாரத்தின் வாயிலாக ஐ.நாவில் உரையாற்ற வந்திருப்பதாகக் கூறிய மகாதீர், மலேசியாவின் வளத்திலும், முன்னேற்றத்திலும் ஒவ்வொரு மலேசியனுக்கும் பங்கு இருப்பதைத் தான் உறுதி செய்ய கடப்பாடு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய மலேசியாவை உருவாக்கியிருக்கும் மலேசியர்களின் சார்பாக அதே போன்ற எதிர்பார்ப்பை அனைத்துலக அளவில் எதிர்பார்த்து தான் வந்திருப்பதாகவும் மகாதீர் தனதுரையில் தெரிவித்திருக்கிறார்.
துன் மகாதீர் ஐக்கிய நாடுகளின் மன்றப் பொதுப் பேரவையில் ஆற்றிய ஆங்கில உரையின் முழுமையான வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம்: