Home இந்தியா மத்தியப் பிரதேச விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி!

மத்தியப் பிரதேச விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி!

1191
0
SHARE
Ad

போபால் : மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சரான கமல்நாத், அம்மாநிலத்தின் 5.3 பில்லியன் டாலர் விவசாயக் கடன்களை இரத்து செய்யப் போவதாகக் கூறியுள்ளார். பயிர் விலைகள் வீழ்ச்சியடைந்து, விவசாயிகளுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களால் அக்கடன்களை திரும்பச் செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், இம்மாதிரியான அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாத, பாரதிய ஜனதாக் கட்சி கடந்த வாரம் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தை காங்கிரஸ் கட்சியிடம் இழந்தது.

திங்களன்று மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற காங்கிரஸ் தலைவர் கமல்நாத், விவசாயிகளின் 200,000 ரூபாய்க்கு அதிகமான கடன்களை தள்ளுபடி செய்தாக வேண்டும் என்றார்.

#TamilSchoolmychoice

பயிர் விலையில் வீழ்ச்சி மற்றும் டீசல் மற்றும் உரங்களின் விலை உயர்வு காரணமாக கடந்த மாதங்களில் விவசாயிகளின் மத்தியில் எதிர்ப்புகள் உயர்ந்து வந்தன.

சுமார் 3.4 மில்லியன் விவசாயிகள் இந்த அறிவிப்பின் வாயிலாக பயனடைய உள்ளதாக மாநில முதன்மைச் செயலாளர் ராஜேஷ் ரஜோரா கூறினார். மொத்தத் தொகையாக சுமார் 350 பில்லியன் ரூபாயிலிருந்து, 380 பில்லியன் ரூபாய் வரையிலான கடன்கள் தள்ளுபடியாகும் எனக் கூறப்படுகிறது.