“ஆராய்ந்து பாராமல் அல்லது வேண்டுமென்றே இனங்களுக்கு இடையே பேணப்படும் உறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவது குற்றச் செயல் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் பல முறை சொல்லி விட்டனர். இருந்தும் ஒரு சில தரப்பினர், தொடர்ந்து இவ்வாறு செயல்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையை பல இன மலேசிய சமுதாயத்தில் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது. அம்னோ காலங்காலமாக கையாளும் இதுபோன்ற உத்திகள், நம்பிக்கைக் கூட்டணி அரசில் களையப்பட வேண்டும்” என்றும் கார்த்தி ஷாண் கூறினார்.
“பொது நன்மைக்கு கேடு விளைவிக்கக் கூடிய இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக, நம்பிக்கைக் கூட்டணி அரசும் இதன் தொடர்பில், தொடர்ந்து அமைதி காக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது உரிய நடவடிக்கையை மேற்கொண்டு மலேசியக் கூட்டு சமுதாயம் நிலைநாட்டி வரும் நல்லிணக்கம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்” எனவும் கார்த்தி தனது அறிக்கையில் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்த வேளையில், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஹிண்ட்ராப் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளை, பிரதமர் துன் மகாதீர் தலைமையில் நாடு இன்னும் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதிலும் ஹிண்ட்ராப் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் கார்த்தி ஷாண் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.