தனது அலுவலகம் இந்த விவகாரம் குறித்த தரவுகளைத் திரட்டி வருவதாகக் குறிப்பிட்ட சிவராசா, பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு சுமார் 700 இடங்களே இருக்கும் நிலையில், அதற்காக ஏறத்தாழ 3000 பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் மாரா இளநிலைக் கல்லூரிகளில் பயில விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் மாரா கல்லூரிகளில் பயில விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் இணையம் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான சிவராசா கூறினார்.
மாரா கல்லூரிகளில் பயில விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் பிரச்சனையை முன்னெடுத்துச் செல்ல, அவர்கள் இணையம் வாயிலாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் சிவராசா கேட்டுக் கொண்டார்.