Home உலகம் இந்தோனிசியா: மரண எண்ணிக்கை 373-ஆக உயர்ந்தது

இந்தோனிசியா: மரண எண்ணிக்கை 373-ஆக உயர்ந்தது

1207
0
SHARE
Ad

ஜாகர்த்தா: டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமைஇரவுஅனாக் கிராகாதவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியதில்  மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.

ஜாவா, சுமத்ரா  தீவுகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,459 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, இதுவரையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 128 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 11,687 பேர் இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக சேவை மையங்களில் தங்கியிருப்பதாகவும் இந்தோனிசிய தேசிய பேரழிவு நிறுவனத்தின் தகவல் முகமைத் தலைவர் சுதுபோ பூர்வோ நுக்ரோஹொ தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பூகம்பம் மற்றும் கண்டத்தட்டு நகர்வியல் (tectonic plates) செயல்பாடு இல்லாமல் நடந்த முதல் ஆழிப் பேரலைச் சம்பவம் இது என இந்தோனிசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியது

இதற்கிடையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோ சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் ஏன் செயல்படவில்லை என ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த எச்சரிக்கைக் கருவிகள் பழுதடைந்திருந்தால் அவற்றை உடனடியாக சீர் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.