நேற்று இந்தோனிசியாவில் உள்ள அனாக் கிராகாதாவ் (Anak Krakatau) என்ற எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்த ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியது. எரிமலையின் வெடிப்பு ஆழ்கடலின் அடிப்பாக நீர்நிலைகளை கிளர்ந்தெழச் செய்தது என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுனாமியால் சுற்றுலாப் பகுதிகளும், குடியிருப்புப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. சுமார் 558 வீடுகளும் 9 தங்கும் விடுதிகளும் மோசமான நிலையில் சேதமடைந்தன. மேலும் 60 உணவகங்களும் 350 படகுகளும் சேதமடைந்திருக்கின்றன.
நேற்றிரவு கடற்கரையோரப் பகுதியில் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த இந்தோனிசியக் கலைக் குழுவினரும் இந்த கோர சம்பவத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் உயிரிழந்தனர், மேலும் சிலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.