இந்த ஆண்டு சீன பெருநாளை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 9 மணி முதல் விஸ்மா சைனிஸ் சேம்பர் (Wisma Chinese Chamber) எனும் இடத்தில் சீன பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை மலேசியா தேசிய வர்த்தகத் தொழிலியல் சங்கம் மிக விமரிசையாக கொண்டாடவுள்ளது.
மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவரும், தேசிய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் உதவித் தலைவருமாகிய டத்தோ ந.கோபாலகிருஷ்ணன், மலேசிய இந்திய மக்களை இவ்விழாவினில் கலந்து சிறப்பிக்க பணிவன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.