Home நாடு 1எம்டிபி: உண்மையை வெளியிட்டதற்கு 8.2 மில்லியன் ரிங்கிட் அன்பளிப்பு!

1எம்டிபி: உண்மையை வெளியிட்டதற்கு 8.2 மில்லியன் ரிங்கிட் அன்பளிப்பு!

866
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி ஊழல் குறித்த தகவல்களை வெளியிட்டதற்காக, முன்னாள் பெட்ரோசாவுடி நிறுவனர் சேவியர் அன்ட்ரே ஜஸ்தோவுக்கு அன்பளிப்பாக 8.2 மில்லியன் ரிங்கிட்டை தி எட்ஜ் மார்கெட்ஸ் நிறுவனர் டான் கூய் ஓங் வழங்கியதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.     

தி எட்ஜ் மார்கெட்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அவர் மலேசியாவிற்கு பெரும் உதவியைச் செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், 1எம்டிபி ஊழல் குறித்த விவகாரங்கள் வெளிவராமலேயே போயிருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.

அவ்வாறு, டி எட்ஜ் மார்கெட்ஸ் மற்றும் டி சரவாக் ரிபோர்ட்ஸ் நிறுவனத்திற்கு 1எம்டிபி குறித்த விவகாரங்களைத் தந்ததால், 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் தாய்லாந்தில் சிறைப்பிடிக்கப்பட்டார்.   

#TamilSchoolmychoice

அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆயினும், தாய்லாந்து மன்னர், ராஜா மஹா வாஜிராலொங்கோர்ன், மன்னிப்பு வழங்கியதால் 18 மாதத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.