வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்து, புதுச்சேரியில் இதற்காக கட்சித் தொடங்கப்பட்டு கொடி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கட்சியின் நிருவாகிகள், வருகிற பிப்ரவரி 24-ம் தேதி நெல்லையில் கட்சியின் ஓராண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அக்கூட்டத்தில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கலாம் எனவும் தெரிவித்தனர். ஆயினும், இது குறித்து கமல்ஹாசன் மட்டுமே முடிவு செய்வார் எனக் கூறினர்.