நஸ்ரி அக்கூட்டத்தில் பங்கெடுத்தால், சட்டரீதியான பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளதாகவும், அவ்வாறான பிரச்சனைகளை தவிர்ப்பதற்கே நஸ்ரியின் பங்கேற்பை எதிர்ப்பதாக அவ்விரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
இதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை, தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு, நஸ்ரி அஜிஸ் கலந்து கொண்டால், மஇகா மற்றும் மசீச அக்கூட்டத்தில் இடம்பெறாது என அறிக்கையின் மூலம் தெரிவித்தன. தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக, நஸ்ரி அஜிஸ்சின் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும், நஸ்ரியின் நியமனம் குறித்து ஒரு போதும் உச்சமன்றக் குழுவில் கலந்தாலோசிக்கவில்லை என்றும், அது குறித்த ஒப்புதலும் வழங்கப்படவில்லை எனவும் அவை தெரிவித்தன.