![](https://selliyal.com/wp-content/uploads/2019/03/Ramli-Mohd-Nor-Bernama-120319.jpg)
கோலாலம்பூர்: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ரம்லி முகமட் நூர் இன்று செவ்வாய்க்கிழமை பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
மலேசிய வரலாற்றில், முதன் முறையாக, பூர்வகுடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் நாடாளுமன்றதில் இடம் பெறுவது இதுவே முதல் முறை.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, கேமரன் மலை இடைத் தேர்தலில், தேசிய முன்னணி சார்பாக களம் இறங்கிய அவர், 12,038 வாக்குகள் பெற்று, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான எம். மனோகரனை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.