Home நாடு வெப்பக் காலங்களில் மக்கள் தீ மூட்டும் பழக்கத்தை கைவிட வேண்டும்!

வெப்பக் காலங்களில் மக்கள் தீ மூட்டும் பழக்கத்தை கைவிட வேண்டும்!

667
0
SHARE
Ad

ஷா அலாம்: நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் வெப்பம் நிலைக் காரணமாக பல்வேறு பகுதிகளில் தீச்சம்பவங்கள் பதிவாகி வருவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தெரிவித்துள்ளது. இம்மாதிரியான சூழலில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.

மக்கள் தீ மூட்டுவதை தவிர்க்கக் கோரியதோடு, அவ்வாறு தீ மூட்டப்படும் போது புகைமூட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதையும் அது சுட்டிக் காட்டியது.

வெப்பக் காலங்களில் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என மக்களுக்கு பல முறைக் கூறியும் மக்கள் தொடர்ந்து குப்பைகளை எரிப்பது போன்ற நடவடிக்கைகளால் புகை மூட்டம் அதிகரித்து, தற்போது காற்று மாசுப்பட தொடங்கி உள்ளது என அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இயற்கையாக வெப்பத்தினால் விளை நிலங்களும், காடுகளும் எரிந்து போவதை சமாளிப்பதற்குள், மக்கள் வேண்டுமனே குப்பைகளை எரித்து நிலைமையை இன்னும் மோசமடையச் செய்கின்றனர் என அது கூறியது.

இதனிடையே, சிலாங்கூர் மட்டும் இல்லாது பிற மாநிலங்களிலும், வெப்ப அளவு கூடியுள்ளதோடு, காற்றின் தூய்மைகேடு சுகாதாரமற்ற நிலையை பதிவுச் செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.