ஆயினும், தற்போதைய தலைவரான ரோனால்டு கியாண்டிக்கு பதிலாக, பாரிட் சுலோங் நாடாளுமன்ற உருப்பினரான (தேசிய முன்னணி), நோராய்னி அகமட்டை நியமனம் செய்ய அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று வியாழக்கிழமை நடக்க இருக்கும் நாடாளுமன்ற அமர்வில் ஒன்பதாவது தீர்மானமாக இது குறித்து பிரதமர் மகாதீர் முகமட் பேசுவார் என நம்பப்படுகிறது.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி, கியாண்டிக்கு பதிலாக, நோராய்னியை அப்பதவிக்கு, தேசிய முன்னணி நாடாளுமன்ற முன்மொழிந்திருந்தது.
பிஏசி தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சியினை நியமிப்பதாக கடந்த 14-வது பொதுத் தேர்தல் அறிக்கையில் நம்பிக்கைக் கூட்டணி அரசு குறிப்பிட்டிருந்தது.