இது தொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையால் மீண்டும் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கான உறவு முறை பாதிப்படையும் எனக் கருதப்படுகிறது.
இந்த சோதனையை, வட கொரியாவின் அதிபர் கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்–உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு, வட கொரியா செய்துள்ள முதல் ஆயுத பரிசோதனை ஆகும்.