“பூர்வக்குடியினரின் சவால்களை சமாளிக்க நாம் முழுமையாக களத்தில் இறங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
“நாட்டின் முதன்மை சமூகமும், சிறுபான்மையினருமான பூர்வக்குடியினரின் நலனுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதற்காக, நாம் இதனை செய்தாக வேண்டும்” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.
“பூர்வக்குடி மக்களின் பாரம்பரியத்தை சேதப்படுத்தும் வகையில் ஒரு சில நடைமுறைகள் இருப்பது, அவர்களை துன்பத்தில் ஆழ்த்துகிறது. இதனால், அவர்களுடைய பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு சார்ந்த விசயங்கள் காணாமல் போகிறது” என அவர் கூறினார்.
நிலப்பகுதி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் எதிர்கால திட்ட அபிவிருத்திக்காக அவர்களின் அனுமதியைப் பெறுவதற்கும் இந்த மாநாடு நடத்தப்படுவதாக அவர் கூறினார்.