Home நாடு நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் 5 நிறைவேற்றப்பட்டுவிட்டன!

நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் 5 நிறைவேற்றப்பட்டுவிட்டன!

499
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஐந்து வாக்குறுதிகளை நம்பிக்கைக் கூட்டணி அரசு நிறைவேற்றி விட்டதாகவும், அவற்றில் 18 வாக்குறுதிகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என ஜனநாயகம், பொருளாதார விவகார நிறுவனத்தின், பொருளாதார வல்லுனர், அட்லி அமிருல்லா கூறியுள்ளார்.

பிரிம் உதவித் தொகைக்குப் பதிலாக பந்துவான் சாரா ஹீடுப் திட்டத்தையும், பொது போக்குவரத்துக்கான மை50 மற்றும் மை100 எனும் மாதாந்திர கட்டண அட்டைகளை அறிமுகப்படுத்தியும் மக்களின் செலவை குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இந்த பிரிம் உதவித் தொகையானது மக்களின், குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, உண்மையாகவே தேவைப்படுபவர்களுக்கு உதவும் பொருட்டில் இதன் இலக்கு மாற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.