Home நாடு 1எம்டிபி பணத்தை அமெரிக்கா, சிங்கப்பூர் திருப்பிச் செலுத்த சம்மதம்!

1எம்டிபி பணத்தை அமெரிக்கா, சிங்கப்பூர் திருப்பிச் செலுத்த சம்மதம்!

678
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 930 மில்லியன் ரிங்கிட் தொகையை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் அரசு திருப்பிச் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில், அமெரிக்கா சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலரை (828 மில்லியன் ரிங்கிட்) திருப்பிச் செலுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, சிங்கப்பூர் சுமார் 35 மில்லியன் சிங்கப்பூர் டாலரை திருப்பிச் செலுத்தவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.