Home நாடு ஐபிசிஎம்சி வருட இறுதிக்குள் அமைக்கப்படும்!- மொகிதின்

ஐபிசிஎம்சி வருட இறுதிக்குள் அமைக்கப்படும்!- மொகிதின்

717
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) இவ்வருட இறுதிக்குள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் மொதியின் யாசின் தெரிவித்தார்.

முன்னதாக, காவல் துறையினரை தண்டிக்கும் எண்ணத்தில் இந்த ஆணையம் அமைக்கப்படும் எனும் தவறான கண்ணோட்டம் காவல் அதிகாரிகள் மத்தியில் இருந்து வந்த நிலையில் இந்த ஆணையத்தை அமைப்பதற்கு காவல் அதிகரிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்து ஆட்சி முறை, நேர்மை மற்றும் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு நல்லமுறையில் காவல் அதிகாரிகளுக்கு இதன் நோக்கத்தையும், செயல்பாட்டையும் எடுத்துரைத்ததற்குப் பின்பு காவல் துறை அதிகாரிகள் இந்த ஆணையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.