Home வணிகம்/தொழில் நுட்பம் 2020-இல் பொது மக்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்!

2020-இல் பொது மக்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்!

932
0
SHARE
Ad

வாஷிங்டன்: 2020-ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலாவுக்கு அனுப்பப்படுவர் என நாசா கூறியுள்ளது

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் விண்வெளியில் அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதுவரை விண்வெளி வீரர்கள் மட்டுமே அங்கு சென்று வருகின்றனர்

இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் விண்வெளி ஆய்வு மையத்துக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்ல அனுமதிக்க நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளி ஆய்வு மையத்தில் ஓரிரவு தங்குவதற்கான கட்டணம் 35,000 அமெரிக்க டாலர் ஆகும். தங்குவது ஓரிரவுதான் என்றாலும் அதற்கான பயணம் 30 நாட்கள் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளதுஆயினும், இந்த பயணத்திற்கான செலவு 58 மில்லியன் டாலர் என ஏபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஓர் ஆண்டுக்கு இரண்டு பேர் மட்டுமே விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அவர்கள் விண்வெளிக்குச் செல்வார்கள்.

அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தை பராமரிக்கவும், எதிர்கால திட்டங்களுக்கும் நிதி திரட்டவும் இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக நாசா குறிப்பிட்டுள்ளது.