Home வணிகம்/தொழில் நுட்பம் புரோட்டோன்: எக்ஸ் 50-க்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது!

புரோட்டோன்: எக்ஸ் 50-க்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது!

696
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புரோட்டோன் வெளியீடான எக்ஸ் 70 ரக வாகனத்திற்குக் கிடைத்த வரவேற்பு சிறப்பானதாக அமைந்தது என்று ஜூதானியா ஓடோமோபில் செண்டெரியான் பெர்ஹாட் விற்பனை மேலாளர் ஏமி லிம் கூறினார்.

ஆயினும், தற்போது இவ்வருட இறுதியில் அல்லது 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட இருக்கும் எக்ஸ் 50 ரக காருக்கு மக்கள் பெரும் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். எக்ஸ் 50 எஸ்யூவி ரக வாகனங்களில் சிறிய அளவிலானது.

ஹோண்டா எச்ஆர்வி மற்றும் டொயோட்டா சிஎச்ஆர் ஆகிய வாகனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த கார் வெளிவர இருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜப்பானிய வெளியீடுகளுடன் ஒப்பிடுகையில் விலையில் 25,000 ரிங்கிட் முதல் 40,000 ரிங்கிட் வரையிலும் மலிவாக இருப்பதால், எக்ஸ் 70 ரக கார்கள் அமோகமாக விற்பனையாகின. இதே மாதிரி எக்ஸ் 50 வகை கார்கள் 75,000 ரிங்கிட் முதல் 95,000 ரிங்கிட் விலை வரம்பில் நிர்ணயிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இவ்வாண்டு கார்களுக்கான விற்பனையில் புரோட்டோன் முன்னிலையில் உள்ளது.

இப்போதைக்கு, எக்ஸ் 70-க்கான தேவை அதிகமாக உள்ளது என்றும் நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்படுவதாக அவர் கூறினார்.

2019-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், புரோட்டோனின் ஆண்டு விற்பனை வளர்ச்சியில் 70 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது.

புரோட்டோனின் முதல் எஸ்யூவி எக்ஸ் 70 ஆகும். கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்த வாகனம் 99,800 ரிங்கிட் முதல் 123,800 ரிங்கிட் வரையில், நான்கு வகைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.