Home நாடு எம்ஏசிசி: வெளிநாடுகளில் உள்ள 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளை மீட்க சிறப்பு குழு இயக்கும்!

எம்ஏசிசி: வெளிநாடுகளில் உள்ள 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளை மீட்க சிறப்பு குழு இயக்கும்!

540
0
SHARE
Ad

புத்ராஜெயா: வெளிநாடுகளில் இருக்கும் 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளை விசாரித்து மீட்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்கும் என ஊழல் தடுப்பு ஆணையத் துணைத் தலைவர் அசாம் பாகி கூறினார்.

இந்த குழுவில் தேசிய நிதிக் குற்ற மையம் (என்எப்சிசி) தலைமையேற்று வழிநடத்த இருக்கும் வேளையில், தேசிய ஆளுமை, நேர்மை மற்றும் ஊழல் தடுப்பு மையமும் (ஜிஐஏசிசி) பங்கேற்கும் என்று அவர் கூறினார்.

நாம் மீண்டும் பெற விரும்பும் சொத்துகளை முதலில் தீர்மானிக்க வேண்டும். இவை, வெளிநாடுகளில் உள்ள சொத்துகள், உள்ளூர் சொத்துகள் அல்லஎன்று அவர் குறிப்பிட்டார்.