Home உலகம் இந்தோனிசியா: கடுமையான நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது!

இந்தோனிசியா: கடுமையான நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது!

639
0
SHARE
Ad

ஜகார்த்தா: இந்தோனிசியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுலாவேசி தீவிற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உண்டாகி உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. யூஎஸ்ஜிஎஸ் (USGS) வெளியிட்டுள்ள தகவலின்படி, 6.9 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு செய்யப்பட்டுள்ளது

இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதனை அந்நாட்டு வானிலை மையம் மீட்டுக் கொண்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு, சுலவேசியிலுள்ள பாலு தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 2,200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.