இந்த சந்திப்பிற்கு பேராசிரியர் இராமசாமி தலைமை ஏற்றார்.
வரும் காலங்களில் பினாங்கு மாநிலத்திற்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியில் இந்த சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று வியாழக்கிழமை தொடங்கிய இந்தியாவுக்கான இந்த பயணத்தின் போது புது டில்லி, பெங்களூரு, சேலம், மற்றும் சென்னையில் உள்ள இந்திய தலைவர்கள், வணிக குழுக்கள், மலேசிய தூதர்கள் மற்றும் மாணவர்களுடனான சந்திப்புக் கூட்டம் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.