“அமைச்சின் கீழ், மூன்று மாதங்களாக, அதன் அரவணைப்பில் செயல்படுவதாக நம்பப்படும் மலேசிய தமிழ்மொழிக் காப்பகத்திற்கு இன்னும் எவ்வித நியமன கடிதமும் கிடைக்காத சூழ்நிலையில், அதன் துணைத்தலைவரின் ஒத்துழையாமையும், முற்றிலும் முரண்பாடான போக்கும் காப்பகத்திற்கும் சாதகமாக இருக்காது. அதேவேளையில், காப்பக செயலவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கல்வி அமைச்சின் அதிகாரிகளாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருப்பதினால், அவர்களையும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்காமல் இருப்பதற்கும், தாம் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என மலேசியக் காவல் துறையில் முன்னாள் ஆணையரான தெய்வீகன் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறினார்.
“தமிழ் காப்பகத்தின் துணைத்தலைவர் பதவியைவிட, தாம் உயிரைப்போல் நேசிக்கும் தாய்த் தமிழும், தமிழ்க் கல்வியும், தமிழ் மொழிக்காப்பகமும்தான் முக்கியம்” என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.