இதனிடையே, தற்போது, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள அந்த பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து மேலும் கூறுகையில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு உதவியவர்களுக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களிடையே தகவல் தொடர்பு பாதிக்கப்படவில்லை. பயங்கரவாதிகள் இந்தியாவின் எல்லைக்குள் நுழையவே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.