Home One Line P1 ஆயர் சிலாங்கூர்: நீரின் தரம் பாதுகாப்பாக உள்ளது!

ஆயர் சிலாங்கூர்: நீரின் தரம் பாதுகாப்பாக உள்ளது!

555
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட மொத்தம் 952 புகார்களில் 842 நீர் துர்நாற்றம் புகார்களை ஆயர் சிலாங்கூர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. 

842 புகார்களில் குறிப்பிடப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட சோதனை  அடிப்படையில், வழங்கப்பட்ட நீர் பயன்படுத்த பாதுகாப்பானது மற்றும் சுகாதார அமைச்சின் நீர் தரத்தரங்களுக்கு இணங்குகிறது என்று சிலாங்கூர் நுகர்வோர் உறவுகள் மற்றும் நீர் தொடர்புத் துறை தலைவர் அப்துல் ராவூப் அகமட் தெரிவித்தார்.

மீதமுள்ள 110 புகார்கள் தொடர்பில் நீர் தர சோதனை மற்றும் சோதனை நடத்துவோம்என்று அவர் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஆயர் சிலாங்கூர் விநியோக முறை மற்றும் சமீபத்தில் ஒன்பது சேவை குளங்கள் கழுவி ஆய்வு செய்யப்பட்டு விட்டது என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், புகார் பகுதியில் நீர்ப்பாசன முறை நடவடிக்கைகள் தொடரும் என்றும், அனைத்து துர்நாற்ற புகார்கள் நீங்கும் வரை தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆயர் சிலாங்கூர் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு என்றும், மோசமான நீர் வழங்கல் ஏற்பட்டால் 15300 அல்லது  019-2800919 / 019-2816793 என்ற வாட்சாப் எண்ணில் அழைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.