Home One Line P1 மார்ச் 30 தொடங்கி 89 பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

மார்ச் 30 தொடங்கி 89 பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

494
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோம்பாக், கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் ஆகிய மொத்தம் 89 பகுதிகளில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை 48 முதல் 68 மணி நேரம் வரை திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும்.

ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி கூறுகையில், இந்த ஆண்டு ஆயர் சிலாங்கூர் பல முக்கிய திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று கூறியிருந்தார்.

பெர்சியாரான் சிலாங்கூர் செக்‌ஷென் 15-இல் உள்ள கார்ல்ஸ்பெர்க் தொழிற்சாலைக்கு அருகில் பழைய குழாய்களை அகற்றி புதிய குழாய்களை இணைப்பதும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.