Home One Line P2 இலக்கியப் பிரிவில் 2018 மற்றும் 2019-க்கான நோபல் பரிசுகளை இருவர் வென்றனர்!

இலக்கியப் பிரிவில் 2018 மற்றும் 2019-க்கான நோபல் பரிசுகளை இருவர் வென்றனர்!

819
0
SHARE
Ad

ஸ்டாக்ஹோம்கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நோபல் வாரம் இன்று வியாழக்கிழமை இலக்கியப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடர்ந்தது. 2019-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் மதிப்புமிக்க பரிசுகளை வென்றவர்களின் பட்டியல் கடந்த அக்டோபர் 7 முதல் 14 வரை அறிவிக்கப்படும்

2018-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸூக்கிற்கு வழங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, நேற்று புதன்கிழமைவேதியியலில் நோபல் பரிசு வென்றவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு ஜான் பிகுடெனோஃப்எம்ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு, லித்தியம் அயன் மின்கலன்களின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனிடையே, அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரை நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) நோர்வே நோபல் குழு அறிவிக்கும்அக்டோபர் 14-ஆம் தேதி ஆல்பிரட் நோபலின் பொருளாதார அறிவியல் பிரிவு வெற்றியாளரின் அறிவிப்புடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

ஒவ்வொரு வெற்றியாளருக்கும் வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா(தோராயமாக 940,000 அமெரிக்க டாலர்ஆகும்.