ஐக்கிய நாட்டு மன்றத்தால் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்ட புராதன மையம்தான் மாமல்லபுரம். ஏற்கனவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப் பயணிகளை ஈர்த்துவரும் சுற்றுலாத் தளம்தான்.
சீனா, இந்தியா என இரு நாடுகளின் மொத்த மக்கள் தொகை இரண்டரை பில்லியன் என்ற நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்திப்பு நடத்தியதும், ஜின் பிங்கிற்கு மாமல்லபுரச் சிற்பங்களின் தொன்மை, அழகியல், போன்ற அம்சங்களை மோடி நேரடியாக விளக்கிச் சொன்ன காட்சிகளும், இரண்டு நாடுகளிலும் மற்றும் உலகம் எங்கும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்பட ஒரே நாளில் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்திருக்கிறது மாமல்லபுரச் சிற்பங்களின் பெருமைகள்!
வழக்கமான இருநாடுகளின் உயர்மட்டத் தலைவர்களின் சந்திப்பு போல் அல்லாமல், கலாச்சார ரீதியிலும், மற்ற அம்சங்களிலும் இதுவரை காணாத அளவுக்கு மாறுபட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மாமல்லபுரத்தின் பெருமைகளையும் சிற்பங்களின் பின்புலங்களையும் அவற்றைப் பற்றி நன்கறிந்த ஒருவர் விளக்குவார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, மோடியே அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு ஜின்பிங்கிற்கு விளக்கியது ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
மோடியும் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தைச் சுற்றிப் பார்த்த காட்சிகளை இங்கே காணலாம்:
-செல்லியல் தொகுப்பு (படங்கள் நன்றி: நரேந்திர மோடி டுவிட்டர் பக்கம்)