தற்போது சிதம்பரம் சிறையில் இருந்து வரும் நிலையில், அவர் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மொத்தம் 14 பேர் மீதும் சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை இன்று வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு மாதங்களாக திகார் சிறைச்சாலையில் இருந்து வரும் சிதம்பரம் பல முறை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தும் இதுவரையில் அவருக்குப் பிணையோ, விடுதலையோ வழங்கப்படவில்லை.
குற்றப் பத்திரிகையில் தற்போது சிறையில் இருந்து வரும் பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட சில தனிநபர்களோடு, சில நிறுவனங்களும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.