Home One Line P1 காணாமல் போன 57 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை!- காவல் துறை

காணாமல் போன 57 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை!- காவல் துறை

535
0
SHARE
Ad

மலாக்கா: கடந்த ஒன்பது ஆண்டுகளில் மலாக்கா மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் 57 குழந்தைகள் இன்றுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மலாக்கா காவல் துறைத் தலைவர் டத்தோ மாட் காசிம் தெரிவித்தார்.

2010 முதல் அக்டோபர் வரை பதிவு செய்யப்பட்ட 303 வழக்குகளில் ஏழு விழுக்காடு சம்பந்தப்பட்டதாக காசிம் தெரிவித்தார்

2010 முதல் 18 வயதுக்குட்பட்ட, 32 பெண் மற்றும் 25 ஆண் குழந்தைகள் தங்கள் குடும்பங்களுக்கு திரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அனைத்து குழந்தைகளின் இருப்பிடம் குறித்து காவல் துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று காசிம் தெரிவித்தார்.

சமூகம் மற்றும் செய்தி ஊடகங்கள் மூலமாக குழந்தைகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட போக்கைப் பார்த்தால், காணாமல் போனவர்கள், அறியப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் தளத்திற்குத் திரும்புகிறார்கள். ஆனால் இந்த 57 பேரும் இன்று வரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவேதான், நாங்கள் கவலைப்பட்டோம்.”

இந்த குழந்தைகள் ஆட்கடத்தல் குழு மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்களா அல்லது வெளிநாட்டில் விற்கப்பட்டார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. எங்களிடம் தெளிவான பதிவு இல்லை, ”என்றார் மாட் காசிம்.