Home One Line P1 தஞ்சோங் பியாய்: 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளனரா?

தஞ்சோங் பியாய்: 3 அடையாளம் தெரியாத நபர்கள் கள்ள வாக்கு செலுத்தியுள்ளனரா?

632
0
SHARE
Ad

தஞ்சோங் பியாய்: ஶ்ரீ குகுப் இடைநிலைப்பள்ளி மற்றும் சுங்கை போ தேசிய பள்ளி வாக்கு மையங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் தங்கள் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி வாக்குகளை செலுத்தியது தொடர்பாக மூன்று வாக்காளர்கள் பெர்மாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

யூ தியோங் கிங் @ யூ லாவ் ஆங், (72), ஹபீபா அப்துல் கபோர், (72), மற்றும் ரிஹானா சோஹா, (60) என்று அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்மூன்று வாக்காளர்களும் வாக்களிக்கும் முன் அவர்களின் அடையாள அட்டை எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.