Home One Line P1 மத, இன வெறுப்புக்கு தீர்வு காண குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற அரசாங்கம் விரும்பவில்லை!

மத, இன வெறுப்புக்கு தீர்வு காண குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற அரசாங்கம் விரும்பவில்லை!

717
0
SHARE
Ad
முகமட் ஹனிபா மைடின்

கோலாலம்பூர்: 2014-ஆம் ஆண்டில் தேசிய ஒற்றுமை ஆலோசனைக் குழு (எம்கேபிஎன்) முன்மொழியப்பட்ட மத, இன வெறுப்பு மற்றும் பாகுபாடு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற அரசாங்கம் விரும்பவில்லை என்று பிரதமர் துறை துணை அமைச்சர் ஹானிபா மைடின் தெரிவித்தார்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் சட்டத்தை நெறிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய ஒற்றுமைக் குழுவின் வரைவு மசோதாக்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

மறுஆய்வு மற்றும் ஆய்வின் விளைவாக, மத மற்றும் மத வெறுப்புச் சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட சில விதிகள் தண்டனைச் சட்டத்தின் கீழ் பலப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதுஎன்று அவர் இன்று வியாழக்கிழமை மக்களைவையில் தெரிவித்தார்.