Home One Line P1 நான்கு நாட்களுக்கு புத்ராஜெயாவில் வண்ணமிகு விளக்குகள் கண்காட்சி!

நான்கு நாட்களுக்கு புத்ராஜெயாவில் வண்ணமிகு விளக்குகள் கண்காட்சி!

776
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2019-ஆம் ஆண்டுக்கான புத்ராஜெயா லைட் அண்ட் மோஷன் (லாம்பு), வண்ணமிகு விளக்குகள் கண்காட்சி, நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சாமாட் கூறினார்.

புதிய ஆண்டை வரவேற்கும் போது வண்ணமயமான விளக்குகள் புத்ராஜெயா மக்களுக்கு இரவு வானத்தை சூழ்ந்துள்ள காட்சியைத் தர உள்ளது என்று அவர் கூறினார்.

முந்தைய ஆண்டைப் போலவே, இந்த ஏழாவது ஆண்டிலும் புதுப்பிப்புகளைக் கொண்டுவந்துள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த முறை, “மலேசியாவின் பன்முகத்தன்மைஎன்ற கருப்பொருளுடன், ‘லாம்பு 2019’ கண்காட்சி, 2020 ஆண்டிற்குள் நுழையும் போது நாட்டின் வரலாறு மற்றும் சாதனைகளை கொண்டு சேர்க்கும்.

நாங்கள் (புத்ராஜெயா கார்ப்பரேஷன்) கடந்த ஆண்டு நிறைய வடிவியல் விளக்குகளை வழங்கினோம், ஆனால் இந்த முறை மலேசியாவிற்கு கலாச்சார தனித்துவத்தின் கருப்பொருளைக் கொண்டுவரும் ஒரு ஒளியைக் கொண்டு வருகிறோம்.”

இங்கே நாம் சைனா டவுன், லிட்டில் இந்தியா, கம்போங் மலாயு போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நாங்கள் இந்த கலாச்சார சேகரிப்பைச் செய்துள்ளோம்” என புத்ராஜெயா கார்ப்பரேஷன் தலைவர் டத்தோ அமினுடின் ஹாசிம் தெரிவித்தார்.