இப்படியான அனைத்து கேள்விகளுக்கும் நாட்டின் பிரபல தன்முனைப்பு உரையாளர் பேராசிரியர் முனைவர் காதர் இப்ராகிம், மின்னல் பண்பலை (எப் எம்) ஏற்பாடு செய்திருக்கும் “நெஞ்சே எழு” தன்முனைப்பு நிகழ்ச்சியில் பயனான உரை வழங்கவுள்ளார்.
2020ஆம் ஆண்டில் நேயர்களின் திட்டங்களும் தீர்மானங்களும் வெற்றி பெறவும்
புதிய நம்பிக்கை பெறவும் வாழ்த்துகளோடு தன்முனைப்பும் தருகிறது மின்னலின் “நெஞ்சே எழு” நிகழ்ச்சி.
காதர் இப்ராகிம் வழங்கும் தன்முனைப்பு கருத்துகளை கேட்டுப் பயன்பெற பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியின் வழி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் மின்னல் பண்பலை தெரிவித்துக் கொள்கிறது.