Home One Line P2 “2021-இல் சந்திராயன் 3 விண்ணில் பாயும்!”- இஸ்ரோ

“2021-இல் சந்திராயன் 3 விண்ணில் பாயும்!”- இஸ்ரோ

872
0
SHARE
Ad

புது டில்லி: சந்திராயன் 2-ஐ மையப்படுத்தி வருகிற 2021-ஆம் ஆண்டில் சந்திரயான் 3 (Chandrayaan 3) விண்ணில் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு விண்ணில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 2 திட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லையென்றாலும், அதன் ஆர்பிட்டர் ஏழு ஆண்டுகளுக்கு நிலவைப் பற்றிய புதிய தகவல்களை அனுப்ப உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சந்திராயன் 3 திட்டத்திற்கான ஒப்புதலை அரசு அளித்துவிட்டதாகவும், தற்போது அது குறித்தப் பணிகள் சீராக நடந்து வருவதாகவும் சிவன் கூறியுள்ளார்