Home One Line P2 தர்பார்: டிஎம்ஒய் நிறுவனத்திற்கு நிலுவைத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே தடை நீக்கப்படும்!

தர்பார்: டிஎம்ஒய் நிறுவனத்திற்கு நிலுவைத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே தடை நீக்கப்படும்!

983
0
SHARE
Ad

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்திருந்த நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தடை பிறப்பித்திருக்கிறது.

மலேசியாவில் அமைந்துள்ள டிஎம்ஒய் நிறுவனம் சார்பாக தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்காக இந்நிறுவனம் 12 கோடி ரூபாய் (600,000 ரிங்கிட்) கடனாக தந்ததாகத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட அந்த தொகையை திருப்பிச் செலுத்தாத வரையில் தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளியிட தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 4.99 கோடி ரூபாய் (2.8 மில்லியன் ரிங்கிட்) டிஎம்ஒய் நிறுவனத்திற்கு செலுத்தியப் பிறகு, தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளிட முடியும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

குறிப்பிட்ட அத்தொகையானது செலுத்தப்பட பின்னர் தர்பார் திரைப்படம் மலேசியாவில் திரையிடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.