Home One Line P1 கொரொனாவைரஸ்: 132 பேர் வுஹானிலிருந்து மலேசியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளனர்!

கொரொனாவைரஸ்: 132 பேர் வுஹானிலிருந்து மலேசியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளனர்!

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனாவின் வுஹானில் சிக்கியுள்ள மலேசியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடுமையான மேற்பார்வையின் கீழ் இன்று திங்கட்கிழமை நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.

சீனாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் 132 பேர் பதிவு செய்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவர்களில் 108 பேர் மலேசியர்கள், மீதமுள்ள 24 பேர் வெளிநாட்டினர்.

மலேசியர்கள் அல்லாத 24 பேர் மலேசியர்களை திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்கள் திரும்பி வருவார்கள்,” என்று டாக்டர் வான் அசிசா நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

132 பேரில், வுஹான் விமான நிலையத்தில் வெளியேற்ற திரையிடலின் போது ஆரோக்கியமாக இருப்பது கண்டறியப்பட்டவர்கள் மட்டுமே வீட்டிற்கு வர விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளான மாவட்டத்தை சீனா மூடியுள்ளதால், மலேசியர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியது என்று டாக்டர் வான் அசிசா தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் தேசிய பேரிடர் துறை (நாட்மா) மற்றும் ஏர் ஏசியா ஆகியவை மலேசியர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் ஈடுபடும்.

ஏர் ஏசியா இன்று விமான பயணத்தை திட்டமிட்டுள்ளது, ஆயினும், அது சீன அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.