Home One Line P2 டில்லி தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதி!

டில்லி தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதி!

659
0
SHARE
Ad

புது டில்லி: டில்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது ஆம் ஆத்மி கட்சியை கடந்து, பாஜக மீண்டு வந்து முன்னிலை பெறமுடியாத வாக்குகளை அக்கட்சிப் பெற்றுள்ளது.

கெஜ்ரிவால் டில்லியில் சுமார் 4,300 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னிலையில் இருக்கிறார். துணை முதல்வர் மனிஷ் சிசோடியா பட்பர்கஞ்சில் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறார், ஆயினும், அவரும் சுமார் 600-க்கும் மேற்பட்ட வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

#TamilSchoolmychoice

ஆம் ஆத்மி 58 இடங்களில் முன்னிலை வகித்தாலும், டில்லியை தளமாகக் கொண்ட அக்கட்சி 2015-ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற 20 இடங்களில் பின்தங்கியிருக்கிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி 67 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தற்போதைய டில்லி சட்டசபையை ஆளுநர் அனில் பைஜால் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.