Home One Line P1 “இளைய தலைமுறையினரிடையே நன்னெறி பண்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை தொடர்ந்து வலுப்படுத்த முடியும்!”- துன்...

“இளைய தலைமுறையினரிடையே நன்னெறி பண்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை தொடர்ந்து வலுப்படுத்த முடியும்!”- துன் மகாதீர்

450
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கான போராட்டத்தில், குடும்பங்கள், பள்ளிகள் மற்றும் சமூகங்களின் பங்கு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, நன்னெறிகளை வளர்ப்பதன் மூலமும், தேசிய கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலமும், அதை வலுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

“எனவே, குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் முரணான விஷயங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பிற விஷயங்களை நாம் பின்பற்றக்கூடாது. இது வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் அடைவதைத் தடுக்கும்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், மலேசியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற அரசாங்கம் உறுதியாக இருக்கும்போது, ​​நாட்டின் எதிர்கால திசை குறித்த சந்தேகங்கள் குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதாக டாக்டர் மகாதீர் கூறினார்.

“முன்னேற்றத்திற்கு வரும்போது, ​​நம்முடைய நம்பிக்கையை இழந்து, இஸ்லாத்தின் மதிப்புகள் மற்றும் அழைப்புகளை புறக்கணித்து வருகிறோம் என்று சில கவலைகள் உள்ளன. ஆனால் வெளிப்படையாக, நாம் அடைந்த முன்னேற்றமும் செழிப்பும் பின்னிப் பிணைந்திருக்கின்றன, மேலும் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறோம்.”

இந்த கொள்கை பல இன மற்றும் மத சமூகங்களின் சமூக நல்வாழ்வு, செழிப்பு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் மக்கள் மற்றும் நாட்டிற்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நம்புவதாக அவர் குறிப்பிடார்.

இது 2030-ஆம் ஆண்டின் தூரநோக்கு பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

நான்காம் தொழில்துறை புரட்சியின் தற்போதைய போக்கு குறித்தும் பிரதமர் கருத்துரைத்தார்.

“இந்த சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மலேசிய மக்களை நமது சொந்த வழியில் வளர்ப்பதில், நாம் இன்னும் புதுமையான, ஆக்கபூர்வமான அறிவு, உயர் திறன்கள், போட்டித்திறன் ஆகியவற்றைக் கொண்டு தொடர்ந்து நம்மை மேம்படுத்த வேண்டும்.”

“இது நம் நாடு. நாம் தான் நம் விதியை தீர்மானிக்கிறோம். சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் அனுமதியுடன் நம்மைத் தவிர வேறு எவராலும் நம் எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது” என்று பிரதமர் கூறினார்.

நாட்டிற்கு முதிர்ச்சியுள்ள, அறிவுள்ள, கடின உழைப்பாளி மற்றும் ஒற்றுமை எண்ணம் கொண்ட மக்களும் தேவை என்று அவர் கூறினார்.

எனவே, அதிக போட்டி நிறைந்த, தூய்மையான மற்றும் ஒருங்கிணைந்த மலேசியாவிற்காக, தொடர்ந்து ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப மக்களை ஒன்றிணைக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.