மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரனின் வருகையின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ செல்லத் தேவன், மஇகா கிள்ளான் தொகுதித் தலைவர் தர்மலிங்கம் ஆகியோரும், ஆலயப் பொறுப்பாளர்களும் உடனிருந்தனர்.
விக்னேஸ்வரன் இந்த ஆலய நிர்மாணிப்புப் பணிகளுக்கு என ஏற்கனவே 15 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்கியிருக்கிறார். தற்போது வழங்கவிருக்கும் 50 ஆயிரம் ரிங்கிட்டுடன் சேர்த்து இதுவரையில் விக்னேஸ்வரன் 65 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை பண்டமாரான் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு வழங்கியிருக்கிறார் எனவும் இராஜரத்தினம் உறுதிப்படுத்தினார்.