Home One Line P1 பிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது!

பிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது!

1582
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவுக்கான இந்திய தூதரகம் தற்போதுள்ள இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாறுதலாகி செல்ல இருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய தூதரகம் ஜாலான் மௌண்ட் கியாராவில் உள்ள மேனாரா 1 மௌண்ட் கியாரா கட்டிடத்தில் 28-வது தளத்தில் இயங்கி வந்தது. தற்போது, ஜாலான் பகாங்கில் உள்ள விஸ்மா எச்ஆர்ஐஎச் லோட்டஸ் கட்டிடத்தில் முதலாவது தளத்தில் செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

தூதரகத்தில் வழங்கப்படும் அனைத்து பொது சேவைகளும், அதாவது கடப்பிதழ் / விசா / ஓசிஐ / தூதரகம் போன்றவை பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூடப்படும் என்று அது அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பிப்ரவரி 24 முதல் புதிய இடத்திலிருந்து அலுவலகம் செயல்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தியத் தொழிலாளர் தொடர்பான உதவிக்கு, இந்தியத் தொழிலாளர் வள அலுவலகம், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் மெனாரா 1 மௌண்ட் கியாராவில் 20-வது தளத்தில் தொடர்ந்து செயல்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட சிரமத்திற்கு இந்திய தூதரகம் தங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.