Home One Line P2 கொவிட்-19: பொருளாதார, சமூக வளர்ச்சி தாக்கத்தை குறைக்க ஆசியான்- சீனா உறுதிபூண்டுள்ளது!

கொவிட்-19: பொருளாதார, சமூக வளர்ச்சி தாக்கத்தை குறைக்க ஆசியான்- சீனா உறுதிபூண்டுள்ளது!

659
0
SHARE
Ad

வியந்தியான்: கொவிட்-19 தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி தாக்கத்தை குறைக்க ஆசியான் மற்றும் சீனா உறுதிபூண்டுள்ளன என்று வியந்தியானில் நேற்று வியாழக்கிழமை கொரொனாவைரஸ் நோய் தொடர்பான ஆசியான்-சீனா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியான் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள், மக்கள் பரிமாற்றம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை பராமரிப்பதாகக் கூறினர்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் இந்த பாதிப்பைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முன்னேற்றத்தின் அடிப்படையில் இப்பகுதியில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேம்படுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

“இந்த நோயால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், குறிப்பாக மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு பொருளாதார நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக ஆசியான்-சீனா டிஜிட்டல் பொருளாதார ஒத்துழைப்பின் கீழ் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள டிஜிட்டல் பொருளாதாரங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பொருத்தமான உதவிகளைப் பெறும்.”

“இந்த ஆபத்தான நோய் மற்றும் அதன் பேரழிவு விளைவுகளை நிவர்த்தி செய்வதில் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் பிலிப்பைன்ஸ் வெளியுறவு செயலாளர் தியோடோரோ லோக்சின் ஆகியோர் தலைமை தாங்கினர். மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லாவும் கலந்து கொண்டார்.

ஆசியான் தலைமையிலான வழிமுறைகள் மற்றும் வெளிப்புற பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

“கொவிட்-19 பற்றி மக்கள் சரியான தகவல்களையும் விவரங்களையும் அளிக்கிறார்கள் என்பதையும், அது தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளால் ஏமாறக்கூடாது என்பதையும் உறுதி செய்வதற்காக சமூக ஈடுபாடு மற்றும் பின்னூட்டங்களை நாங்கள் பலப்படுத்துவோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோயின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த கொள்கை உரையாடலையும் பரிமாற்றத்தையும் வலுப்படுத்த உள்ளதாக ஆசியான் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

“ஆசியான் மற்றும் சீனாவில் தொடர்புடைய நிறுவனங்கள், அனைத்து தரப்பினரும் தொடர்புடைய தரவு மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாற்றம், சுகாதாரம் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல், மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களுடனான வருகைகள் மற்றும் சுகாதார அவசரகால பணியாளர்கள் குறித்த ஆசியான்-சீனா பட்டறை நடத்துவதற்கான வாய்ப்பு, நோய் கட்டுப்பாட்டு மையங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட அனுபவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். “என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.