Home One Line P2 இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளது!- அனைத்துலக நாணய நிதியம்

இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளது!- அனைத்துலக நாணய நிதியம்

682
0
SHARE
Ad

புது டில்லி: அனைத்துலக நாணய நிதியத்தின் அக்டோபர் மாத உலக பொருளாதார கண்ணோட்டத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தரவரிசைப்படுத்தப்பட்டபோது, ​​அந்த நாடு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தைக் காட்டிலும் முன்னேறியுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கடந்த தசாப்தத்தில் உலகிலேயே மிக உயர்ந்ததாக உள்ளது. மேலும், தொடர்ந்து 6 முதல் 7 விழுக்காடு வரை ஆண்டு வளர்ச்சியை அது அடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

2016 மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் அறிக்கையின்படி, நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்திய தொழில்நுட்பங்கள் உட்பட, இந்த விரைவான உயர்வு பல காரணிகளால் தூண்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஒன்பது ஆண்டுகளில், உலக பொருளாதாரங்களின் தரவரிசையில் இந்தியா ஒன்பதாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2010- ஆம் ஆண்டளவில், பிரேசில், இத்தாலி போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஒன்பதாவது இடத்தில் இருந்தது.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் உயர்வு வியத்தகு அளவில் முன்னேறியுள்ளது. 1995 முதல், நாட்டின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 700 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அதன் வலுவான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும், நாடு இன்னும் சவால்களை எதிர்கொள்கிறது. வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான அணுகல் சீரற்றதாக உள்ளது என்று உலக வங்கி கூறுகிறது, ஆயினும் இவை புவியியல் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு வேறுபடுகிறது.

மேலும், உலகின் ஏழைகளின் இருப்பிடமாக இந்தியா இருப்பதாக ஐநா கூறியுள்ளது. அதன் கிராமப்புற மக்களில் வெறும் 39 விழுக்காட்டினர் சுத்தமான வசதிகளை அணுக முடியும் என்றும், மொத்த மக்கள்தொகையில் பாதி மக்கள் இன்னும் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.